மஞ்சள் மற்றும் தேன் சிகிச்சை

ஒரே மருந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருந்தால் நமக்கு மிகவும் சௌகரியமாக இருக்கும். அதுவும் எளிமையான முறையில் பணச்செலவு இல்லாமல் வீட்டிலேயே இயற்கை முறையில் இந்த தீர்வு கிடைக்கும் என்றால் வேண்டாம் என்று யாருமே சொல்ல மாட்டர்க. அப்படி ஒரு சிகிச்சை தான் இன்று நாம் பார்க்க இருப்பது. அதுவே தேன் மற்றும் மஞ்சள் சிகிச்சை

மஞ்சள் மற்றும் தேன் சிகிச்சை

தேன் மற்றும் மஞ்சள் சிகிச்சைக்கு  ஆண்டிபயாடிக், வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆனால் சில ஆரோக்கியம் தொடர்பான தொந்தரவுகள் உள்ளவர்கள் சற்று கவனமாக பயன்படுத்த வேண்டும். இந்த தீர்வை பின்பற்றுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

மஞ்சள் , ஜிங்கிபெரசியா என்ற தாவர குடும்பத்தில் இருந்து வந்த ஒரு பாரம்பரிய மசாலா பொருள் ஆகும். இஞ்சியும் இதே குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
ஆசியாவில் இது பரவலாக கிடைக்கும் ஒரு பொருள். குறிப்பாக, உலக ஏற்றுமதியில் பெரும்பங்கு இந்தியாவில் இருந்து கிடைக்கப்படுகிறது. இந்த தாவரத்தின் வேர் பகுதியில் பல முக்கிய கூறுகள் இருப்பதால் உணவை ருசிக்க செய்யவும், மருத்துவ குணங்களையும் ஒருசேரப் பெற்ற ஒரு பொருளாக இந்த மஞ்சள் உள்ளது. மஞ்சளின் ஆரஞ்சு நிறம் காரணமாக, சில நிறுவனங்கள் ஆடை சாயங்களை தயாரிப்பதற்கான ஒரு தளமாக இதனைப் பயன்படுத்துகின்றன. மேலும் , மனித ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் போது, இது  இயற்கையான அழற்சி, வலி நிவாரணி மற்றும் தடுப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சளில் உள்ள உயர் குர்குமின் அளவுடன் இணைந்த மற்ற அன்டி ஆக்சிடென்ட்களும் பல்வேறு வகையான நோய்களை தடுக்கும் பண்புகளை இதற்கு வழங்குகின்றன. இதன் காரணமாக பல நூற்றாண்டுகளாக பல்வேறு மருத்துவ சிகிச்சைகளில் இந்த மஞ்சள் ஒரு முக்கிய மூலப்பொருளாக இருந்து பல நிவாரணங்களை அளித்து வருகிறது. இந்த மஞ்சளுடன் இணைந்து மற்றொரு மூலப் பொருளான தேன் பல நன்மைகளைச் செய்து வருகிறது. 

இந்த தேன் மற்றும் மஞ்சள் ஒருங்கிணைந்து  , ஒரு சக்தி வாய்த்த அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமிநாசினி பண்புகளைக்  கொண்டு, உடல் பாதுகாப்பை வலுப்படுத்திட உதவுகிறது. இது ஒரு சக்தி வாய்ந்த இயற்கை ஆண்டிபயாடிக் என்று கருதப்படுகிறது. நோய்களை உண்டாக்கும் பல வகையான கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்க இந்த கலவை பெரிதும் உதவுகிறது. மற்ற செயற்கை தீர்வுகளைப் போல், இவை குடல் இயக்கங்களில் எந்த ஒரு தீங்கையும் உண்டாக்குவதில்லை. மாறாக  நல்ல பக்டீரியா உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் இதனை உணவுகளில் கூட சேர்த்துக் கொள்ளலாம். 

இந்த கலவையில் குறிப்பிட்ட அளவு பாலிபீனால் , வைட்டமின் மற்றும் மினரல்கள் உள்ளன. இந்தக் கலவையில் 150 க்கும் அதிகமான சிகிச்சைகள் உள்ளன, இதில் அழற்சி குறைபாடுகள் மற்றும் புற்றுநோய்களின் பல்வேறு வகைகள் ஆகியவை அடங்கும். இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஈ , உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளை அழிக்க உதவுகின்றன. மேலும் முன்கூட்டியே வயது முதிர்வை ஏற்படுத்தும் கூறுகளை அழிக்க உதவுகின்றன.

இந்தியாவின் இயற்கையாக குணப்படுத்தும் முறையான ஆயுர்வேதத்தில், இந்த மஞ்சள் சிகிச்சை செரிமான, கல்லீரல் மற்றும் கிருமிகளால்  ஏற்படும் கோளாறுகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு தன்மையால், முடக்கு வாதம், கீல்வாதம், மூட்டு வலி  போன்ற நோய்களால் அவதிப்படும் நோயாளிகளுக்கு நல்ல ஒரு தீர்வைத் தருகிறது.

இதன் மேலும் சில நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

• சர்க்கீனா, கஃப்கியா, கோரினேபாக்டீரியம் மற்றும் குளோஸ்டிரீடியம் போன்ற நோய்களுக்கு எதிராக போராடுவதற்கான திறன்.
• மூளையைப் பாதுகாக்கிறது மற்றும் டிமென்ஷியா ஆபத்தை குறைக்கிறது.
• நச்சுகளை நீக்குகிறது.
• சில வகையான புற்றுநோய் சிகிச்சைகளின் எதிர்மறை தாக்கத்தை குறைக்கிறது.
• காய்ச்சல், சளி மற்றும் பிற சுவாச நிலைமைகள் தொடர்பான அறிகுறிகளைத் நிவர்த்தியாக்குகிறது.
• சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை தடுக்கிறது.
• சிறுநீரக புண்கள் அழிக்கப்படுகின்றன.
• கொழுப்பை குறைக்கிறது.
• கொழுப்பின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கான திறன்.

தேன் மற்றும் மஞ்சள் கலவையை எப்படி தயாரிப்பது :
மேலே கூறியவற்றுள் எதாவது ஒரு ஆரோக்கிய குறைபாட்டை நீங்கள் சந்தித்தால், இந்த தேன் மற்றும் மஞ்சள் தீர்வை நீங்கள் முயற்சிக்கலாம். இதனால் உங்கள் பிரச்சனை தீர்ந்து உங்கள் நோய் எளிதில் குணமடைகிறது. ஆனால் இவற்றின் முழு நன்மைகளையும் பெற நீங்கள் பயன்படுத்தும் எல்லா மூலபோருட்களும் 100% ஆர்கானிக் முறையில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்:
4 ஸ்பூன் தூய தேன் (100 கிராம்)
1 ஸ்பூன் மஞ்சள் (10 கிராம்)

செய்முறை :
ஒரு ஸ்பூன் மஞ்சளுடன் நான்கு ஸ்பூன் தேன் சேர்த்து இந்த கலவையை காற்று புகா ஜாரில் ஊற்றி வைக்கவும். 
பயன்படுத்துவதற்கு முன் இரண்டு பொருட்களும் நன்றாக சேருமாறு கலந்து பயன்படுத்தவும் 

எடுத்துக் கொள்ளும் முறை :
தினமும் காலை உணவிற்கு முன்பு இந்த கலவையை  ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்வது ஒரு சிறந்த தடுப்பு மருந்தாக செயல்படுகிறது.

உங்களுக்கு சளி இருந்தால், தினமும்  ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, இந்த கலவையை  அரை ஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம். மறுநாள், இதன் இடைவெளியை அதிகரித்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த சிகிச்சையை 3 நாட்கள் தொடர்ந்து செய்யலாம். இன்னும் சளிக்கான அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், இந்த சிகிச்சையை மேலும் அதிகரிக்கலாம்.

இந்த கலவை உங்கள் வாயில் கரையும் வரை இருக்கட்டும். இது மிகவும் இனிப்பான சுவையாக இருப்பதாக உணர்ந்தால், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் இந்த கலவையைச் சேர்த்து பருகலாம்.

செரிமானம் தொடர்பான தொந்தரவுகள் உள்ளவர்கள், இந்த கலவையை  வெதுவெதுப்பான நீரில் கலந்து உணவிற்கு முன்பு பருகி வரலாம். 

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் :
பித்தப்பை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சள் சேர்த்த எந்த ஒரு தீர்வையும் தவிர்ப்பது நல்லது.

கர்ப்பிணிகள் அல்லது குழந்தைக்கு தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள், இந்த தீர்வை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனைக் கேட்பது நல்லது.

இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கும் மருந்துகளின் பயன்பாட்டில், மஞ்சள் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கலாம். ஆகவே இதய கோளாறு அல்லது இரத்த ஓட்ட ஆரோக்கியத்திற்காக மருத்துகள் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த தீர்வைப் பின்பற்றலாம்.

அறுவை சிகிச்சைக்கு திட்டமிட்டிருப்பவர்கள் இதன் பயன்பாட்டைத் தவிர்க்கலாம்.