நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கேரளாவில் ஓணம் கொண்டாடினார்.
![நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்](https://www.namkural.com/uploads/images/2020/08/image_750x_5f4d13cb01e1a.jpg)
ஓணம் கொண்டாடுவதற்காக கேரளா புறப்பட்ட திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் தங்களது கொண்டாட்டங்களின் அழகிய படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர்.
விக்னேஷ் இயக்கிய விஜய் சேதுபதி-நயன்தாரா நடித்த 'நானும் ரவுடி தான்' படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினார் . விக்னேஷ் அடுத்து நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா அக்கினேனி நடித்துள்ள “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தை இயக்கவுள்ளார்.
“சுற்றியுள்ள அனைத்து அழகான மக்களுக்கும் ஓணம் வாழ்த்துக்கள் :)”
“மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணங்களைக் கண்டுபிடித்து அவற்றை நம்பிக்கையுடன் மேம்படுத்துவோம் :) இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் அனைவரின் முகத்திலும் ஒரு புன்னகையை அழைக்க ஒரே வழி இதுவே :) “
என்று அவர் தன்னுடைய வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்