இந்து மதத்தின் படைக்கும் கடவுள்

இந்து மதம் என்பது கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு மதம் ஆகும். கடவுளை பிரபஞ்சத்துடன் ஒப்பிடும் ஒரு நம்பிக்கை இந்து மதத்தில் உள்ளது.

இந்து மதத்தின் படைக்கும் கடவுள்

இந்து மத கடவுள்களில் மும்மூர்த்திகள் என்று அறியப்படும் பிரம்மர், விஷ்ணு மற்றும் சிவபெருமானில் படைக்கும் கடவுளான பிரம்மர் முதல் கடவுளாக இருக்கிறார். இதில் பிரம்மர் படைக்கும் கடவுளாகவும், விஷ்ணு பகவான் காக்கும் கடவுளாகவும் , சிவபெருமான் அழிக்கும் கடவுளாகவும் இருக்கிறார்கள். 

பிரம்மர் என்ற பெயருக்கு சம்ஸ்க்ருதத்தில் வளர்ச்சி, விரிவு மற்றும் படைப்பு என்பது பொருளாகும். இந்த வழியில், பிரம்மர் படைக்கும் கடவுளாக அறியப்படுகிறார். இந்த பிரபஞ்சம் முழுவதையும் , அதில் வாழும் எல்லா உயிர்களையும் பிரம்மர் படைத்திருக்கிறார். இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் படைத்தவராகவும், இயக்குபவராகவும் பிரம்மர் இருக்கிறார். தேவி சரஸ்வதி, பிரம்ம தேவரின் மனைவி ஆவார். சரஸ்வதி தேவி, அறிவு மற்றும் ஞானத்தின் கடவுளாக விளங்குகிறார்.

பிரம்மரின் தோற்றம் :

பாற்கடலில் ஆதிசேஷன் மீத படுத்துக் கொண்டிருக்கும் விஷ்ணு பகவானின் தொப்புளில் மலர்ந்த தாமரையில் இருந்து பிறந்தவர் பிரம்ம தேவர். விஷ்ணுவின் தொப்புளில்(நாபி) இருந்து தோன்றியதால் இவரை  "நாபிஜன்ம" என்றும் அழைப்பார்கள் என்று இந்து மத கோட்பாடு தெரிவிக்கிறது. நாராயணனின் தாமரையிலிருந்து வளர்ந்து வரும் பிரம்மா என்பது பிரபஞ்சத்தின் சாம்ராஜ்யத்தை உருவாக்கும் பெயர். அவர் வானுலக மற்றும் தெய்வீக மாந்தர்களின் சின்னமாகப் போற்றப்படுபவர். பிரபஞ்சத்தின் மூன்று முக்கிய உறுப்பினர்கள்  (பிரம்மா, விஷ்ணு, மற்றும் சிவன்) அழிக்க முடியாதவர்கள் என்றும் அவர்கள் முழு பிரபஞ்சத்தின் உருவாக்கம், பாதுகாத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றுக்கு பொறுப்பு ஏற்பவர்கள்  என்றும் வேதம் புருஷ சுகட்டத்தில் கூறுகிறது. "நாராயண" என்பது உபநிஷதத்தில் கொடுக்கப்பட்ட சமஸ்கிருத பெயர் ஆகும், இதற்கு முதன்மைக் கடவுள் என்ற பொருள் ஆகும்.

இந்த பிரபஞ்சத்தின் பல்வேறு வடிவங்களை ஒவ்வொரு அவதாரம் எடுத்து படைத்து , பின் மீண்டும் நாராயணனுக்குள் கரைந்து விடுவார் பிரம்மர் . நாராயணர் என்பவர் படைக்கவும் முடியாத அழிக்கவும் முடியாத பரம்பொருள் ஆவார். இறையியல் படி, பிரம்மர் ஒரு சுயம்பு. அண்டவியல்படி பிரம்மரே விஸ்வகர்மா (பிரபஞ்சத்தில் தலைவர்) மற்றும் இவரே விதி (தொடக்கம்)


பிரம்மர் பற்றி :

மற்ற இந்து கடவுள்களைப் போலவே பிரம்மாவின் படமும் மாய உருவங்களைக் கொண்டுள்ளது. ஒருவர் பிரம்மாவின் சிலைகளைக் காணும்போது, படைப்பின் கடவுள் உருவத்தில்  நனைந்து போகிறார். நான்கு முகம் மற்றும் நான்கு கைகளைக் கொண்டதால் அவரின் உருவம் தனித்துவம் பெற்றது. இவரை சதுர்முகன் என்றும் அழைப்பார்கள். பிரம்மா எல்லையற்ற உண்மையை குறிக்கும் தாமரையின் மீது அமர்ந்திருப்பதைக் காணலாம். உண்மை என்பது அவரது குனாதிசயத்தின் அடிப்படைப் பண்பாகும். பிரம்ம தேவரின்  நான்கு முகங்களும் நான்கு வேதங்களான ரிக், யஜுர் , சாமம் மற்றும் அதர்வனம் ஆகியவற்றைக் குறிக்கிறது. பிரம்மர் அணிந்திருக்கும் விலங்கு தோல் தீவிரத்தைக் குறிக்கிறது. அவருடைய நான்கு கைகளில் ஒரு கையில் கமண்டலத்தைக் கொண்டிருக்கிறார். அது சந்நியாசத்தின் அல்லது துறவறத்தின்  சின்னமாகும். 


பிரம்மரின் மூன்று முக்கிய கொள்கை :

உலக வாழ்க்கை என்பது படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் என்ற மூன்று கொள்கையின் விளக்கமாகும். இந்த மூன்று கொள்கைகளும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளது. அழித்தல், படைத்தல் மற்றும் காத்தல் ஆகியவை ஒன்றாக இருக்கிறது. இவை ஒரே வண்டியின் வெவ்வேறு சக்கரமாகும். எனவே தான் மும்மூர்த்திகளும் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய மூன்றையும் குறிக்கின்றனர். அடிப்படையில் மூன்றும் ஒன்றே. 


மேலே கூறிய உண்மை கடவுள் தத்தாத்ரேயா உருவத்தின் மூலம் சிறப்பாக விளக்கப்படுகிறது. இந்த உருவத்தில் மூன்று கடவுளும் ஒன்றாக அமைந்திருப்பார்கள். தத்தாத்ரேயாவிற்கு பிரம்மர், விஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆகிய மூன்று முகங்கள். இந்த மூன்று முகங்களும் அவர்களின் மூன்று கொள்கைகளை பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரபஞ்சத்தில் பிரம்மரைத் தவிர மற்ற எல்லா உயிர்களும் படைக்கப்பட்டு சில காலம் காக்கப்பட்டு பின்பு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அழிக்கப்பட்டு மற்றொரு வடிவத்தில் மறுபடி புதுபிக்கப்படுகிறது. இப்படி இந்து மதம் மறுபிறவி என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

படைக்கும் கடவுளாக இருந்தாலும், விஷ்ணு பகவான் மற்றும் சிவபெருமான் போல் இவரை பரவலாக வழிபடுவது கிடையாது. பிரம்மருக்கு என்று இந்து மதத்தில் ஒரு தனித்துவம் இருந்தாலும், விஷ்ணு மற்றும் சிவபெருமானுடன் ஒப்பிடும்போது பிரம்ம தேவருக்கு சில ஆலயங்கள் மட்டுமே பூமியில் உள்ளது.