நீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில யோசனைகள்

உங்களின் பிம்பமாக உங்கள் வீடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரா நீங்கள்? ஆம் என்றால் நீங்கள் செய்ய வேண்டிய வேலை இன்னும் நிறைய உள்ளது. 

நீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில யோசனைகள்


நீங்கள் புதிய வீடு வாங்கினாலும் அல்லது பழைய வீட்டை புதுபித்தாலும், உங்களுக்கு பல்வேறு ஸ்டைல் மற்றும் உட்புற வடிமைப்பு பற்றிய புரிதல் இருந்தால், உங்கள் வீட்டை அழகாக மாற்றலாம். இது நிச்சயம் ஒரு சவாலான காரியம் தான். அதற்காக உங்களுக்கு சில யோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து உங்கள் தேர்வில் வெற்றி பெறலாம்.

வீடு என்பது எவ்வளவு பெரிதாக உள்ளது என்பது முக்கியமில்லை. எவ்வளவு சந்தோஷமாக உள்ளது என்பது தான் முக்கியம். வீடு என்பது தங்குவதற்கான கூடாரம் மட்டும் இல்லை. அதை விட பெரிய விஷயங்கள் இதில் உள்ளது. வெறும் நான்கு சுவர்கள் மட்டும் கொண்ட ஒரு வீட்டில் நம்மால் வாழ முடியுமா? கண்டிப்பாக முடியாது. வீடு என்பது நம்முடன் சேர்ந்து வாழும் மனிதர்களால் முழுமை அடைகிறது. அதனை சொர்க்கமாக மாற்ற உதவுவது சில சரியான வடிவமைப்புகளும் தொழில் நுட்பங்களும். இந்த மாற்றங்களை எளிய முறையில் வசிப்பவர்களின் விருப்பத்திற்கேற்பவும் வசதிக்கேற்பவும் மாற்றி அமைக்கும்போது வீடு சொர்க்கமாக மாற்றம் பெறுகிறது. கீழே குறிபிட்டுள்ள 7 யோசனைகளை படித்து, உங்கள் வீட்டை சொர்க்கமாக மாற்றுங்கள்.

வெளிச்சம் :
இயற்கை மற்றும் செயற்கை வெளிச்சத்தின் சரியான கலவை ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. வீட்டில் நிறைந்திருக்கும் சரியான வெளிச்சம் , அதன் அழகை கூட்டிக் காட்டும். சன்னலின் அளவு மற்றும் சன்னல் திரைகள் சரியான அளவு வெளிச்சத்தை உள்ள கொண்டு வரும். சமையலறை போன்ற இடங்களில் இந்த வெளிச்சத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இங்கு அதிக செயல்பாடுகள் இருப்பதால் சௌகரியமும் இங்கு தான் அதிகம் தேவைப்படுகிறது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற லைட்டிங் முறைகளை இங்கு பயன்படுத்தலாம்.

சிறு சிறு பொருட்களுக்கான இடம் :
சில பொருட்கள் எப்போதாவது தேவைப்படும். ஆகவே அதற்கான தனி இடங்களை தேவைகேற்ப அமைத்து கொள்ள வேண்டும். மூலை முடுக்குகளை அழகாக பயன்படுத்த வேண்டும். சுத்தமான சீராக பயன்படுத்தப்பட்ட இடம், பார்ப்பதற்கு ஒரு வித அமைதியை உண்டாக்கும். இதனால் ஏற்படும் அதிர்வலைகள் உடலுக்கு நன்மை  பயக்கும். தேவையற்ற பொருட்களை வைக்க சில பெட்டிகள் அல்லது பாஸ்கெட்களை பயன்படுத்தலாம்.

காலியாக வையுங்கள் :

உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் பொருட்களை அடுக்கி வையுங்கள். முடிந்த அளவிற்கு நிறைய இடத்தை காலியாக வையுங்கள். தகுந்த இடத்தை சரியாய் பகிர்வதும், நன்கு இயக்கப்பட்ட இட மேலாண்மையும் சரியான புகலிடத்தை உருவாக்கும். இப்போதெல்லாம், திறந்தவெளி மற்றும் திறந்தவெளி காற்றோட்டம் கொண்ட வெளிப்புறத் திட்டங்கள் ஒரு பிரபலமான போக்குகளாக மாறிவிட்டன. ஒழுங்காக திட்டமிடப்பட்டிருந்தால் மிகச் சிறிய இடம் கூட மிகவும் அழகானதாக தோற்றமளிக்கும்.
 
சில ஸ்டைலை உருவாக்குங்கள் :
உங்கள் குணநலன் அல்லது உங்கள் குடும்பத்தின் தனித்தன்மை போன்றவற்றை விளக்கும் ஒரு தீம் அல்லது ஸ்டைலை தேர்ந்தெடுங்கள். குறைந்த பட்சம் ஒரு பாரம்பரிய அல்லது நடைமுறை அச்சு இருப்பதை பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் பொருட்கள் மற்றும் அலங்காரங்களில் ஒரு பன்முகத்தன்மை இருந்தால் சிறப்பு. ஒரு நாளின் இறுதியில் உங்கள் மன அழுத்தத்தை போக்கும் விதமான நிறங்களை பயன்படுத்துங்கள். 

வசதியான இருக்கைகளை தேர்ந்தெடுங்கள் :
ஒரு சோர்வான நாளில் நாம் அனைவரும் எதிர்பார்ப்பது சௌகரியமான இருக்கைகள் மற்றும் படுக்கைகள். நமக்கு மட்டுமல்ல, வீட்டிற்கு வரும் விருந்தினர்களும் வசதியாக அமர்வதற்கு ஏற்ற வகையில் அறைகலன்களை வாங்குதல் முக்கியம்.சரியான இருக்கைகளை வாங்குவதால் அறையின் அழகியல் மேலும் கூடுகிறது.

செடிகளை வையுங்கள் :
பச்சை பசேலென சில செடிகளை வீட்டிற்குள் வைப்பது ஒரு உணர்ச்சி மிக்க ஒரு அனுபவத்தை தரும். வரவேற்ப்பறை  மற்றும் சாப்பிடும் அறைகளில் சில செடிகளை தொட்டியில் வைக்கலாம். இதனால் சோர்வு, அழுத்தம் போன்றவை குறையும். உட்புற தோட்டம் அல்லது நீர் அம்சம் ஆகியவை கொண்ட இயற்கை நிலப்பரப்புக்கு திறந்த பெரிய ஜன்னல்கள் அல்லது பிரஞ்சு கதவுகளைச் சேர்ப்பதன் மூலம் மேலும் அழகு அதிகரிக்கும். 

அழகான பொருட்களுடன் உங்கள் தனிப்பட்ட அறையை அழகாக்குங்கள் : உங்கள் ஷெல்ப்களை அல்லது சுவர்களை பழங்கால ஆபரணங்கள், பொருட்கள், படங்கள், போன்றவற்றை பயன்படுத்தி அலங்கரிக்கலாம். நிச்சயமாக இது உங்களின் தனித்தன்மையை காட்டும்., மேலும் உங்கள் வீட்டின் அழகை அபிவிருத்தி செய்வதுடன் ஒரு அமைதியான சூழலை உருவாக்கும் .