எண்ணிலடங்கா மருத்துவ நன்மைகள் கொண்ட மூலிகை

இமயமலையின் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மூலிகைகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் சிறப்பான பண்புகள் மற்றும் எண்ணற்ற நன்மைகளைக் கொண்டுள்ளன.

எண்ணிலடங்கா மருத்துவ நன்மைகள் கொண்ட மூலிகை

எண்ணற்ற தாவரங்கள் இமயமலைப் பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன, அவை எளிதில் மற்ற இடங்களில் கிடைக்காது. அவற்றுள் ஒரு மூலிகை ஃபரன். இது பல்வேறு ஆரோக்கிய நண்மைகளைக் கொண்ட ஒரு மூலிகை. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மூலிகை உத்தரகண்ட் மாநிலத்தின் ஆல்பைன் புல்வெளிகளில் காணப்படுகின்றன. 

இது மலைப்பாங்கான பகுதிகளில் உணவின் சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது. இது உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் மருத்துவ குணங்களையும் உணவில் இணைக்கிறது. வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களால் இந்த மூலிகை அழைக்கப்படுகிறது.  இந்த மூலிகை ஜூன்-ஜூலை மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பயிரிடப்படுகிறது, பின்னர் அவை உலர வைக்கப்பட்டு, சேமிக்கப்பட்டு மீதமுள்ள மாதங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

உத்தரகண்ட் மக்கள் இந்த மூலிகையை மற்ற மசாலாப் பொருட்களுடன்  சேர்த்து தங்கள் உணவில் சிறந்த சுவை மற்றும் அதிக ஆரோக்கியத்திற்காக பயன்படுத்துகிறார்கள். காய்கறிகள் முதல் கறிக்கூட்டு வரை எல்லாவற்றிலும் இந்த மூலிகையை சேர்த்து உணவின் ஆரோக்கியத்தையும் சுவையையும் அதிகரிக்க முடியும். நீரிழிவு நோய்க்கு உதவுவது முதல் பித்த கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பது , இரத்தத்தை சுத்திகரிப்பது வரை, இந்த மூலிகையில்  எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதனை உட்கொள்பவர்கள் மட்டுமே அதன் பலனை முற்றிலும் அடைய முடியும்.

ஃபரனின் பரவலான வகைகள்:

உலகின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வகையான ஃபரன் வகைகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் மனித ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளன.

உத்தரகண்ட் பள்ளத்தாக்கில் வளர்க்கப்படும் ஃபரன், ஒரு தனித்துவமான சுவை கொண்டது, இது மற்ற வகைகளிலிருந்து வேறுபடுகிறது. இப்பகுதியின் மண் மற்றும் பருவநிலை தாவரத்தின்  சுவை மற்றும் மருத்துவ பண்புகளை மேம்படுத்துகிறது.

ஃபரனின் நன்மைகள்:

பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் பல பயன்பாட்டு மூலிகையாக இதன் இலைகள் விளங்குகின்றன. அவற்றின் நன்மைகள் சிலவற்றை இப்போது காண்போம்.

1. அஜீரணத்திற்கு நிவாரணம் வழங்குகிறது:

இந்த மூலிகையை சாப்பிடுவது உங்கள் வயிற்று ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மற்றும் அஜீரணத்தின் அறிகுறிகளை எளிதாக்க உதவும். இது வயிற்றில் உள்ள உணவை எளிதில் உடைக்க அனுமதிக்கிறது, இதனால் உங்கள் உடல் அதை சரியாக ஜீரணிக்கும்.

2. இரத்தத்தை சுத்தம் செய்கிறது:

இந்த மூலிகை உடலில் இருந்து அனைத்து வகையான அசுத்தங்களையும் அகற்றி இரத்த சுத்திகரிப்புக்கு உதவுகிறது. இது முழு உடலிலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

3. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் மக்கள் குறிப்பாக இந்த மூலிகையைப்  பயன்படுத்தலாம். ஃபரன் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு உணவாக கருதப்படுகிறது. எனவே, உடல் பாக்டீரியா, கிருமிகள், வைரஸ்கள், நோய்த்தொற்றுகள் போன்றவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்த மூலிகை அனுமதிக்கிறது.

4. இருமல் மற்றும் சளிக்கு இதமளிக்கிறது:

குறிப்பாக பருவகால மாற்றங்களின் போது நீங்கள் அடிக்கடி இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டால், நீங்கள் ஃபரனை உட்கொள்ள வேண்டும். இது பருவகால காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது. 

5. ஆஸ்துமா பாதிப்பைக் குறைக்கிறது:

இந்த மூலிகை ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மஞ்சள் காமாலைக்கு சிகிச்சையளிக்கவும் இந்த மூலிகை உதவுகிறது.