நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 எளிய மற்றும் இயற்கை வழிகள்

   உலகம் முழுவதும் நோய் பாதிப்பை உண்டாக்கும் கிருமிகள் இருந்தாலும் உங்கள் உடல் பாதிக்கப்படுவதற்கு உங்கள் ஆரோக்கிய சீர்கேடு மட்டுமே காரணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 எளிய மற்றும் இயற்கை வழிகள்

நோய் கட்டுபாட்டு மையங்களின் ஆய்வுப் படி, 41 மாநிலங்களில் காய்ச்சல் கிருமிகள் மக்களுக்கு அழிவை உண்டாக்கி வருகின்றன. காய்ச்சலுக்கான தடுப்பூசியை இந்த ஆண்டு எடுத்துக் கொண்டவர்கள் தவறாமல் அடுத்த ஆண்டும் எடுத்துக் கொள்ளுங்கள். சுவாச கோளாறுகளை உண்டாக்கும் இதர கிருமிகளைப் பற்றி நினைவில் கொள்ளுங்கள்- parainfluenza கிருமிகள், அடினோ கிருமிகள், கொரோனா கிருமிகள், ரைனோ கிருமிகள் ஆகியவை.. ஸ்ட்ரெப்டோ கோகோஸ் போன்ற பாக்டீரியாவிப் பற்றி எதுவும் குறிப்பிட இயலாது.
. நோய்களைப் பரப்பும்  நுண்ணுயிர்களிடம் இருந்து உங்கள் உடலைக் காக்க உதவும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். ஆகவே நோய்களிலிருந்து நம்மை காக்கும் அந்த நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக செயல்பட வைப்பது நமது கடமையாகும்.

1. போதுமான அளவு உறக்கம் பெற்று, மனச்சோர்வை தடுத்திடுங்கள். தூக்கமின்மை மற்றும் மனஅழுத்தம், கார்டிசால் என்னும் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் அதிகம் சுரப்பதால் நோயெதிர்ப்பு செயல்பாடு குறைகிறது.

2. புகையிலை மற்றும் புகைப் பழக்கத்தை விட்டு விடுங்கள். இது அடிப்படை நோயெதிர்ப்பு பாதுகாப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் அனைவருக்கும் மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா ஆபத்துக்களை எழுப்புகிறது, குழந்தைகளில் நடுத்தர காது தொற்று நோயை உண்டாக்குகிறது.

3. குறைந்த அளவு மதுவை எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாக மது அருந்துதல், நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு சேதம் உண்டாக்குகிறது மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது.

4. உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளை காய்கறிகள், பழங்கள், பருப்புகள், விதைகள் ஆகியவை போதுமான அளவு தருவதால் அவற்றை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். 
பெரியவர்கள் அதிக அளவு பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்வதால் , ஸ்ட்ரெப்டோகோகஸ் நிமோனியாவிற்கு எதிராக செயல்பட வைக்கும் நிமோ வேக்ஸ் தடுப்பூசிக்கு ஆதரவாக உடல் செயல்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. 

5. நுண்ணுயிர் கலந்து தயாரிக்கப்படும் உணவுகள் சிருவாழூண் என்னும் ப்ரோபயோடிக்குகள் ஆகும். இவை உடலுக்கு நன்மை விளைவிக்கின்றன. சுவாசம் மற்றும் இரைப்பை குடல் நோய்த்தொற்றுகளின் நிகழ்வுகளை இவைகள் குறைக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புளிக்க வைத்த பால் பொருட்கள் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் சுவாச தொடர்பான தொற்றை போக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

6. சூரியக்கதிர்களை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சருமம் உற்பத்தி செய்யும் வைட்டமின் D இன் அளவை சூரிய ஒளி தூண்டுகிறது. வெயில் காலங்களில் தினமும் 10-15 நிமிடம் சூரிய ஒளியில் நிற்பதால் நன்மை கிடைக்கிறது. ஆனால் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் சூரிய ஒளியின் பலம் குறையும். மிகச் சில உணவுகளில் மட்டுமே வைட்டமின் டி சத்து உள்ளது. வைட்டமின் டி சத்து குறைபாடால் சுவாச தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஒரு நாளில் 1200IU அளவு வைட்டமின் டி மாத்திரைகள் உட்கொள்வதால் குழந்தைகளுக்கு influenza A ஏற்படும் அபாயம் குறைவதாக 2010ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. இருப்பினும் பெருங்குடல் புற்று நோய் பாதித்த பெரியவர்களுக்கு ஒரு நாளில் 1000IU அளவு வைட்டமின் டி மாத்திரைகள் கொடுக்கப்பட்டபோது , மேல் சுவாச தொற்று பாதிப்பிற்கு எதிராக போராட தவறி விட்டதாக அறியப்படுகிறது.

7. தினமும் பூண்டு சாப்பிடுங்கள். பூண்டு ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் நோயெதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு உணவுப்பொருள். வெப்பம் முக்கிய செயலாக்க மூலப்பொருளை செயலிழக்க செய்யும் என்பதால், உணவிற்கு முன் பூண்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

8. ஷிடேக் மற்றும் மைடேக் போன்ற மருத்துவ வகை  காளான்களை உணவில் இணைத்துக் கொள்ளுங்கள். ஷிட்டேக் காளான்களின் சாற்றை எடுத்துக் கொள்வதால் மார்பக புற்று நோய் உள்ள பெண்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ஒரு சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

9. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இ. சென்டிகொகஸ், ஆசிய குணசிங்கி, (Asian ginseng (Panax ginseng)) , அமெரிக்க குணசிங்கி (American ginseng (Panax quinquefolius)) அல்லது அஸ்ட்ராகாலஸ் போன்ற மூலிகைகளை எடுத்துக் கொள்வதால் அடிக்கடி ஏற்படும் தொற்று பாதிப்புகள் தடுக்கப்படும்.

10. நிலவேம்பு கசாயம் பருகுவதால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் அதிக சக்தியைப் பெறுகிறது. சுவாச பகுதியில் உள்ள கிருமிகள் பலம் அதிகரிக்கும்போது இதனை எடுத்துக் கொள்வதால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து கிருமிகள் அழிக்கப்படுகின்றன.